• Download mobile app
20 Jan 2026, TuesdayEdition - 3632
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விலங்குகள் நலவாரியத்தில் என் பணி என்ன சவுந்தர்யா விளக்கம்

September 20, 2016 தண்டோரா குழு

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா விலங்குகள் நல வாரியத்தின் தூதராக கடந்தவாரம் நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விலங்குகள் நலவாரிய நல்லெண்ண தூதர் பதவியை ரஜினியின் மகள் சவுந்தர்யா உடனடியாக ராஜினாமா செய்ய தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அவருக்கு எதிராக கண்டன ஆர்பாட்டங்களையும், உருவ படத்தையும் எரித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அதைபோல் தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணம் விலங்குகள் நல வாரியம் என வீர விளையாட்டு மீட்பு கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்தில் தன்னுடைய பணி என்ன என்பது குறித்து சவுந்தர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா அல்லது அது கிராபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வாங்குது தான் என் பணி என்றும் கோச்சடையான் படத்தை இயக்கியதில் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறையில் நல்ல அனுபவம் உள்ளதால் தான் விலங்குகள் நலவாரியம் என்னை இப்பணியில் அமர்த்தியது என சவுந்தர்யா விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க