• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நியுசிலாந்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி அசத்தல் வெற்றி !

January 26, 2019 தண்டோரா குழு

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கிடையேயான இரண்டவாது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுன்கனுயில் இன்று நடந்தது. இதில், ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தரப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, தவான் ஜோடி சிறப்பாக விளையாடி ‘சூப்பர்’ துவக்கம் கொடுத்தனர். இருவரும் அரை சதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தபோது, தவான் (66) அவுட்டானார். ரோகித் 87 ரன்கள் எடுத்தார். பவுல்ட் ‘வேகத்தில்’ கேப்டன் கோஹ்லி (43) ஆட்டமிழந்தார். ராயுடு (47) அரை சத வாய்ப்பை இழந்தார். தோனி, ஜாதவ் இணைந்து அசத்தினர்.
இறுதியில், இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 324 ரன்கள் எடுத்தது. தோனி (48), ஜாதவ் (22) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக பவுல்ட், பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர், 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து 40.2 ஓவரில்234 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார்.
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க