‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குநர் பொன்ராம். இறுதியாக சிவகார்த்திகேயனை வைத்து சீமராஜா படத்தை இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
தொடர்ந்து மூன்று படங்களை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வந்த பொன்ராம் தன் அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார். இதற்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்த பொன் ராம் அப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதி அவரை அணுகி இருக்கிறார். அக்கதை விஜய் சேதுபதிக்கும் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் , இருவரும் இணைந்து படம் பண்ணுவது உறுதியாகியுள்ளதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. தயாரிப்பாளர் யார், எப்போது படப்பிடிப்பு என்பது விரைவில் தெரியவரும்.
விஜய் சேதுபதி தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்க்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்