• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி ‘குண்டு’

December 8, 2018 தண்டோரா குழு

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ், கபாலி, காலா என அடுத்தது வெற்றிப்படங்களை கொடுத்தார்.

தற்போது பாலிவுட்டில் பிர்சா முன்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளார். இதற்கிடையில், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் இயக்குநர் பா.ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று பா.ரஞ்சித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்குகிறார். அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய டென்மா இசையமைக்கிறார்.

மேலும் படிக்க