• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சோமையம்பாளையம் பகுதியில் ஊருக்குள் துழைந்த 12 காட்டு யானைகள்

December 8, 2018 தண்டோரா குழு

கோவை சோமையம்பாளையம் பகுதியில் ஊருக்குள் 12 காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில் சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக நேற்றிரவு நுழைந்தன. குடியிருப்பு பகுதிகளில் யானைகள் கூட்டங்கூட்டமாக உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர். யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிகளை கடந்து ஒரு முட்காட்டில் நின்றுள்ளன. யானைகளை கண்காணித்து வரும் வனத்துறையினர் யானைகளை விரட்ட போராடி வருகின்றனர். இதேபோல தூடியலூர் அருகே அப்பநாய்க்கன்பாளையத்தில் கிராமத்திற்குள் நுழைந்த 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க