December 6, 2018
தண்டோரா குழு
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் சூழலில், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோவையில் உள்ள தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது, பாபர் மசூதி இடித்த இடித்ததில் மீண்டும் அதே இடத்தில் மசூதி கட்ட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.