• Download mobile app
01 Aug 2025, FridayEdition - 3460
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் 14ம் தேதி தொடக்கம்!

December 5, 2018 tamil.samayam.com

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில், ஆருத்ரா தரிசனம் வருகிற 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பூலோகக் கைலாசம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று காலை, சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு, பிரகாரம் வலம் வந்து கொடிமரம் சன்னதியில் எழுந்தருளுவர். பின், கொடி மரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் நடராஜ தீட்சிதர் சிறப்பு பூஜைகள், பன்னிரு திருமுறை வழிபாடு நடைபெற்று, காலை, 8:00 மணியளவில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து தினமும், சிவாகமசுந்தரி அம்மன் சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

மேலும் படிக்க