• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெல்லையில் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் காவல் ஆய்வாளர்

December 4, 2018 தண்டோரா குழு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தந்தையை இழந்து வறுமையில் வாடும் 3 குழந்தைகளை தத்தெடுத்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிகிறது.

சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சியை சேர்ந்த கோட்டூர்சாமி என்பவர் இருதினங்களுக்கு முன் சாலைவிபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தை வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரிப்பதற்காக கோட்டூர்சாமியின் வீட்டிற்கு புளியங்குடி காவல் ஆய்வாளர் ஆடிவேல் சென்றார்.அப்போது தான் அந்தக் குடும்பம் வறுமையில் இருப்பது அவருக்கு தெரியவந்தது.

கை, கால் எலும்பு முறிவால் முடங்கிய தாயையும், மாற்றுத்திறனாளி சிறுவன் உள்ளிட்ட மூன்று குழந்தைகளையும் தந்தை இழந்து வறுமையில் வாடுவதை கண்ட காவல் ஆய்வாளர் ஆடிவேல் மூன்று குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்தார். இதையடுத்து 3 குழந்தைகளையும் தத்தெடுத்து அவர்களது வாழ்நாள் முழுவதுக்குமான செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

காவல் ஆய்வாளரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்க