• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சாக்கடையில் இருந்து 5 மாத சிசு மீட்பு!

December 3, 2018

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள பஜனை கோயில் அருகே சுமார் ஐந்து மாதங்களான சிசு உயிருடன் சாக்கடையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள பஜனை கோவில் வீதி அருகே இருக்கும், பெருமாள் கோவில் மைதானம் அருகே உள்ள சாக்கடையில் இன்று காலை சுமார் ஐந்து மாதமான சிசு உயிருடன் கிடந்தது. இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் உடனடியாக கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் உயிரோடு இருக்கும் சிசுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐந்து மாதங்கள் ஆன இந்த சிசு ஆண் குழந்தை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த சிசு தொப்புள் கொடியுடன் அறுந்து கிடந்தது காண்போரையெல்லாம் சோகத்தில் ஆழ்ந்தியது.

இந்த சிசு எப்படி இங்கு வந்தது ? இதன் தாய் யார் ? என கோவை இராமநாதபுரம் ஆய்வாளர் லதா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க