November 28, 2018
தண்டோரா குழு
கஜா புயலால் பாதித்த தமிழகத்திற்கு ஏர் இந்தியா விமானம் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்ப சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான தஞ்சை,திருவாரூர்,நாகை,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலில் கோர தாண்டவத்தால் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.இதையடுத்து,அரசு மற்றும் தனியார் அமைப்பினர்,தொண்டு நிறுவனங்கள் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில்,நிவாரண பொருட்களை வழங்கும் தன்னார்வலர்களுக்கு உதவும் வகையில்,அரசு பேருந்துகள்,ரயில்களில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கான சரக்கு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில்,தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்களை எடுத்து செல்ல ஏர் இந்தியா விமானத்தில் சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.மேலும்,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிராத்திப்பதாகவும்,ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.