• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னிடம் பாரபட்சமாக நடந்துகொண்டார் – பிசிசிஐயிடம் மிதாலி ராஜ் புகார்

November 27, 2018 தண்டோரா குழு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ்,பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது குற்றம்சாட்டி பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார்.வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 6 வது மகளிர் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.இத்தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இப்போட்டியில் மிதாலி ராஜ் நீக்கப்பட்டார்.இதற்கிடையில்,இத்தொடரில் இரண்டு அரைசதங்கள் விளாசிய மிதாலிராஜ் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.மேலும் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,இதுதொடர்பாக விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ள மிதாலி ராஜ்,தாங்கள் வெஸ்ட் இண்டீசுக்கு சென்றதில் இருந்து பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னிடம் பாரபட்சமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க