• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சார்லஸ் மைக்கேளின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் டூடுள்

November 24, 2018 தண்டோரா குழு

காது கேளாதோருக்கான சைகை மொழியை உருவாக்கிய சார்லஸ் மைக்கல் திலேப்பே-வின் 306 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கூகுள் நிறுவனம் அவருக்கு டூடுள் வெளியிட்டுள்ளது.

சார்லஸ்-மிசெல் டி ஐயெபீ ((Charles-Michel De l’Epee)) என்பவர் தமது வாழ்க்கையை ஏழை மற்றும் காதுகேளாத குழந்தைகளின் கல்விக்காக அர்ப்பணித்தவர். 1789ம் ஆண்டு சார்லஸ் தனது 77ம் வயதில் காலமானார். மைக்கல் சார்லஸ்க்கு இன்று 306 வது பிறந்தநாள் இவரை சைகை மொழியின் தந்தை என உலகம் போற்றுகிறது.

பிரின்ஸ் நகரில் இருந்த உயர் குடும்பம் ஒன்றில் சார்லஸ் நவம்பர் 24 1712ம் ஆண்டு பிறந்தார். இவரது பிறந்த நாளை மாற்றுத்திறனாளிகள்
அனைவரும் தங்களின் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர்.கேட்கும் திறன் இல்லாதவர்களுக்கும் வாய் பேசும் திறன் இல்லாதவர்களுக்கும் 1760 ஆண்டு அன்று தனியாக பள்ளி கூடத்தை நிறுவினார்.

காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்கள் மற்றவர்களின் உதடு அசைவை வைத்து தான் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு வருகிறார்கள்.
ஆனால் வேறு மொழியில் பேசும் போது தாய்மொழிக்காரர்களுக்கு அதனை புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்னையை போக்கவே காது கேளாதோருக்காக வாய் பேச முடியதவர்களுக்கு பிரத்யேக சைகை மொழி உருவாக்கப்பட்டது.

சார்லஸ் மைக்கல் திலேப்பே என்பவர் தான் முதன்முதலில் காது கேளாதோருக்காக வாய் பெசததோருக்காக சைகை மொழியை உருவாக்க முயன்றார். இவருடைய தந்தை ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முறை குடிசைப்பகுதிக்கு சார்லஸ் சென்றார்.

அப்போது காது கேட்கும் திறன் இல்லாத இரண்டு சகோதரிகள், ஒருவருக்கொருவர் சைகை மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சார்லஸ்க்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த சைகை மொழியையே நாம் ஏன் காது கேளாத மற்றவருக்கும் கொண்டு செல்லக்கூடாது என்று நினைத்தார்.

பின்னாளில், இதுபோன்ற சைகை மொழிக்காகவே தனியாக பள்ளி ஒன்றையும் தொடங்கினார். காது கேளாதோர் அங்கு பயில பல சலுகைகளையும் வழங்கினார்.

இவருக்கு மதக் கல்வியை போதிப்பதில் தான் ஆர்வம் அதிகம் இருந்தது.ஆனால் அதனைகடந்து மாற்றுதிறனாளிகளின் மொழியை உருவாக்குவதில் ஈடுப்பட்டார் சார்லஸ். இவரின் மொழி அறிவின் மூலம் தன் மாற்றுத்திறனாளிகள் தங்களது நியாயத்தை நிதி மன்றத்தில் வைக்க முடிந்தது.

சார்லஸ்-மிசெல் டி ஐயெபீனால் உலகளவில் வாய் பேசமுடியாத, காது கேளாத குழந்தைகளுக்கும் கல்வியறிவு கிடைக்கும் வகையில் முக்கிய திருப்பமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வகையில் 1789ம் ஆண்டு சார்லஸ் தனது 77ம் வயதில் காலமானார். இன்று மைக்கல் சார்லஸ்க்கு 306 வது பிறந்தநாள். இவரை கெளரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இவருக்கென பிரத்யேகமாக கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க