• Download mobile app
06 Jul 2025, SundayEdition - 3434
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளியா யார் சொன்னது? டிடிவி தினகரன்

November 8, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளியா யார் சொன்னது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது.இதனால் அமைச்சர்கள் படம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில்,தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்,

“ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்பது எனக்கே தெரியும்.2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர்,ஜெயலலிதாவை கோமளவள்ளி என கூறி விமர்சனம் செய்தார்.அப்போது ஜெயலலிதாவே என்னிடம்,”ஏன் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள்” என்று கேட்டார்.”நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே,ஏன் இப்படி சொல்கிறார்கள்” என்று என்னிடம் கேட்டார்.அமைச்சர்கள் படம் பார்த்து விட்டு கருத்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை.நான் படம் பார்த்துவிட்டு,ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன் என கூறியுள்ளார்”.

மேலும் படிக்க