• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 1500 பேர் மீது வழக்கு பதிவு ?

November 7, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் தீபாவளியன்று,நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று (நவம்பர்6) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.எனினும் இம்முறை தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க நேரத்தை நிர்ணயித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்,இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசும் தெரிவித்திருந்தது.

மேலும்,இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில்,தமிழகத்தின் பல பகுதிகளில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தமிழகம் முழுவதும் 1500 பேர் மீது சுமார் 622 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகபட்சமாக சென்னையில் 343 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதே போல்,கோவையில் 184 பேர் மீதும்,விழுப்புரத்தில் 160 பேர் மீதும்,மதுரையில் 109 பேர் மீதும்,திருவள்ளூரில் 105 பேர் மீதும்,சேலத்தில் 100 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க