• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜார்க்கண்ட்டில் முதல் முறையாக பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

November 3, 2018 தண்டோரா குழு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன் முறையாக பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகம் நக்சல் தாக்குதல் நடக்கும் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் கொண்டு வந்து சிகிச்சை அளிப்பது என்பது மிகவும் சிரமமாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன் முறையாக பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த பைக் ஆம்புலன்ஸில் ஆம்புலன்சில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளது.

இந்த ஆம்புலன்ஸ் மேற்பகுதியை எளிதாக மடிக்ககூடிய வசதி, இருபுறமும் சாயும் வசதியுள்ள இருக்கை, முதலுதவி பெட்டி என பல அம்சங்களுடன் இந்த ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. நான்கு சக்கர ஆம்புலன்ஸை வாகனங்களில் உள்ளது போல எச்சரிக்கை ஒலியை எழுப்பும் வசதியும் உள்ளது. முதலில் இந்த பைக் ஆம்புலன்ஸ் நக்சலைட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் நக்ஸல் தாக்குதல் நடத்தினால் காயமடைந்தவர்களை விரைவில் மருத்துவமனைக்குக் அழைத்துச்செல்ல முடியும் சாதாரண ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத பகுதிக்கும் சென்று சிகிச்சை அளிக்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க