இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் முக்கிய பிரமுகர்கள்,முதன்மை நிறுவனங்கள்,உள்ளூர் அமைப்புகள்,கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து சாலை விபத்துக்களை தவிர்க்க மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ‘உயிர் ‘ என்ற தன்னார்வ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதன் தொடக்க விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி,உயிர் அறக்கட்டளை அமைப்பினை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி,
“ஹெல்மெட்,சீட் பெல்ட்டுகள் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதே சாலை விபத்துக்கு காரணம்.சாலை விபத்தை தடுக்க புதுமையான திட்டத்தை உயிர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.வாகன ஓட்டிகள் தங்களது பொறுப்பை உணர்ந்தால் விபத்தில்லா மாநிலமாக உருவாக்க முடியும்.விபத்து தொடர்பாக உயிர் என்ற அமைப்பு மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
108 ஆம்புலன்ஸ் இலவச சேவை தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.ஆம்புலன்ஸ் சேவையால் 4.60 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்துவதற்காக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் தரப்பட்டுள்ளது.விபத்தில்லா நாட்டினை உருவாக்க அரசுடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.விபத்து பற்றி குறும்படங்களை வெளியிடுதல்,விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாலை விபத்துகளை தடுக்க 272 ரோந்து வாகனங்கள் நெடுஞ்சாலைகளை கண்காணித்து வருகிறது.தமிழகம் முழுவதும் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலை விபத்துகளில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.விபத்து மற்றும் அவசர கால பாதுகாப்பு திட்டம் மூலம்,சிகிச்சைக்கான காலத்தை குறைத்து உயிரிழப்பை தடுத்து வருகிறோம்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விபத்து சிகிச்சை மையங்கள் விரிவுபடுத்தப்படும்”.இவ்வாறு பேசினார்.
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை
தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் ! தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!!