• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

October 25, 2018 தண்டோரா குழு

இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட்,5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.அதைப்போல் இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது.இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.2 வது போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் மீதமுள்ள 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது.இந்த அணியில் வேகபந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அணி விபரம் வருமாறு:

கோலி,ரோகித் ஷர்மா,ஷிகர் தவான்,அம்பதி ராயுடு,MS டோனி,ரிசாப் பன்ட்,ரவிந்திர ஜடேஜா,குல்தீப் யாதவ்,சாஹல்,புவனேஷ்வர் குமார்,ஜாஸ்பிரிட் பும்ரா,கலீல் அகமது,உமேஷ் யாதவ்,KL ராகுல்,மனிஷ் பாண்டே

மேலும் படிக்க