• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2018ம் ஆண்டுக்கான” சியோல் அமைதி விருது ” பிரதமர் மோடிக்கு அறிவிப்பு

October 24, 2018 தண்டோரா குழு

தென் கொரியாவின் மிக உயரிய சியோல் அமைதி பரிசு Modinomics மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்ததால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படவுள்ளது.

சியோல் அமைதி விருது என்பது 1990ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள சியோல் என்ற இடத்தில் அறிவிக்கப்பட்டது.உலக நாடுகள் மத்தியில் நட்புணர்வை வளர்க்க மற்றும் அமைதியை நிலைநாட்ட உதவிய நபர்களை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,2018ம் ஆண்டின் சியோல் அமைதி விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.இந்த விருதை பெறும் 14வது நபர் மோடி.உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியாவை,பொருளாதார வளர்ச்சி மற்றும் மனிதவளத்தில் மேம்பாடு அடைய செய்ததற்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விருது மோடிக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.தனக்கு இந்த விருதை அறிவித்ததற்காக கொரிய குடியரசிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க