• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சச்சின், டேவிட் வார்னர் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா !

October 22, 2018 தண்டோரா குழு

இந்தியா வந்துள்ள வெஸ்ட் விண்டீஸ் அணி,5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்தது.’டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.வெஸ்ட் விண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 322 ரன்கள் குவித்தது.இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து,323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் களமிறங்கினர்.தவான் 4 ரன்களில் அவுட் ஆனார்.பின்னர் கேப்டன் கோஹ்லியுடன் இணைந்த ரோகித் சர்மா அதிரடியாக விளையாட இருவரும் சதம் விளாசினர்.கேப்டன் விராத் கோஹ்லி 140 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.இறுதியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 326 ரன்களை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.ரோகித் சர்மா 20ஆவது சதம் அடித்ததுடன்,152 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவர் 150 ரன்களைக் கடப்பது இது ஆறாவது தடவையாகும்.இதன் மூலம்,ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களைக் கடந்த வீரர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும்,இதுவரை ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர்,ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் 5 முறை 150 ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க