• Download mobile app
19 Feb 2026, ThursdayEdition - 3662
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“மீடூ” குறையை நியாயமான முறையில் சொல்ல வேண்டும் – கமல்

October 12, 2018 தண்டோரா குழு

“மீடூ” குறையை நியாயமான முறையில் சொல்ல வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என அறிவிக்கும் தைரியம் நாடகம் நடத்துபவர்களுக்கு கூட இருக்கிறது.ஆனால் மழை காரணமாக தேர்தலை தள்ளி போடவேண்டுமா என்பது தான் இங்கே பெரிய கேள்வி.அதிக பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றோம்.ஆனால் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை.அதனால் மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியமால் இருக்கிறோம்.கோவிலில் இருப்பவர்களின் துணையில்லாமல் சிலைகள் காணாமல் போக வாய்ப்பு இல்லை.மேலும் பாடகி சின்மயி குற்றசாட்டு குறித்து,குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும் விளக்கமளிக்க வேண்டும்.மீ டு குற்றச்சாட்டுகள் நியமாக இருக்க வேண்டும்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க