• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது– முக.ஸ்டாலின்

October 8, 2018 தண்டோரா குழு

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின்சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. ஊழல் குறித்து வெளியிட்டுள்ள ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையாக உள்ளது.பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பல்கலை கழக முறைகேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாமல், அதிமுக அரசு தலைமைச் செயலாளரை வைத்து தேர்தலை தள்ளி வைத்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மக்களால் விரட்டியடிக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க