• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இடி தாக்கி பழமையான மரம் தீப்பற்றியது

October 8, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் இருந்து லேசான மழை பெய்ய துவங்கியது.சிறிது நேரத்தில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திடீரென இடி இடிக்கும் சத்தம் கேட்டது.இதனைத்தொடர்ந்து தாவரவியல் பூங்கா புல் தரையின் மத்தியில் இருக்கும் நூற்றாண்டு பழமைவாய்ந்த மரம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தீயணைப்பு துறையினர் கொட்டும் மழையிலும் மரத்தில் பற்றிய தீயை அணைக்க போராடி வருகின்றனர்.மழை பெய்து கொண்டிருந்ததால் பூங்காவில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் நடைபெறவில்லை.

மேலும் படிக்க