• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் முடங்கியிருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் சீரானது

October 8, 2018 தண்டோரா குழு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த இரண்டு மணி நேரமாக செயல்படாமல் இருந்த `108′ அவசர எண் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.விபத்து மற்றும் மருத்துவ அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்பு எண் 108 உள்ளது.அவசர சிகிச்சை எண்ணான `108′ சேவை மையம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரும் அழைப்புகள் இங்கு வந்த பின்னர் தான் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு மாற்றப்படும்.

இதற்கிடையில் பி.எஸ்.என்.எல்.,தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டதால்,108 அழைப்புக்கான சேவை பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரதற்கு மேலாக முடங்கியதாக சேவை மையத் தலைமையகம் அறிவித்தது.எனவே மருத்துவ ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண்ணுக்கு பதில்,தற்காலிகமாக அழைப்பதற்காக மற்றொரு எண்ணையும் அறிவித்திருந்தது.இந்நிலையில், 108 அழைப்பு சேவை மீண்டும் சீராகிவிட்டதால், தற்காலிக எண்ணுக்கு அழைக்க வேண்டாம் என அதன் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க