• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்…வானிலை மையம் அறிவிப்பு

October 6, 2018 தண்டோரா குழு

தமிழகத்திற்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் (அதி கனமழை எச்சரிக்கை) விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்,

அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி ஓமன் நோக்கி நகர்ந்து விடும். புயல் சின்னம் ஓமன் வளைகுடாவுக்கு நகர்வதால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.மேலும் அக்டோபர் 8-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யும்.குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.மத்திய, தென்கிழக்கு அரபிக் கடல்பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனக் அவர் கூறினார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் 12 செ.மீ மழையும், விழுப்புரத்தில் 2 12 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.

மேலும் படிக்க