• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவை மீண்டும் மிரட்ட காத்திருக்கும் மழை…… 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

October 3, 2018 தண்டோரா குழு

கேரளாவின் இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா அண்மையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழை பெய்தது. மிகப்பெரும் இயற்கை பேரிடரை சந்தித்த கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 -க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மாநிலத்தில், பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது கேரள மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) அறிக்கையின் படி, வரும் ஞாயிற்றுக்கிழமை கனமழை மிக மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக மாறி வருவதால் இரண்டு மாநிலங்களில் கனமழை தரும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அம்மாவட்டங்களில் ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் படிக்க