• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண்ணின் இறப்புக்கு காரணமான காதலன் மற்றும் தோழி மீது நடவடிக்கை கோரி மனு

October 1, 2018 தண்டோரா குழு

கோவையில் தாழ்த்தப்பட்ட பெண்ணின் இறப்புக்கு காரணமான காதலன் ஆசிப்,தோழி கல்பனா மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்தனர்.

கோவை வீரபாண்டி அறிவொளி நகரைச் சேர்ந்த சிவக்குமாரின் மகள் சந்தியா.இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.அப்போது கோத்தகிரியைச் சேர்ந்த ஆசிப் என்பவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.இருவீட்டாரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து சந்தியாவின் தோழி கல்பனாவின் வீட்டில் வைத்து ஆசிப்பை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாததால்,சந்தியாவின் பெற்றோர்கள் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் கடந்த ஜீன் 16ம் தேதி புகார் அளித்தனர்.

இதனையடுத்து காரமடை காவல்துறையினர் மேட்டுப்பாளையம் நெல்லித்துரை அருகே சந்தியாவின் பிரேதத்தை கண்டுபிடித்துள்ளனர்.சந்தியாவின் கொலையில் சந்தேகம் இருப்பதால்,அவரது காதலன் ஆசிப் மற்றும் கல்பனாவிடம் உரிய விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க