• Download mobile app
29 Dec 2025, MondayEdition - 3610
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்பாட்டம்

September 29, 2018 தண்டோரா குழு

முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நிறைவேற முடியாமல் உள்ள நிலையில், முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு மத்திய அமைச்சரவையும் அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். மத்திய அரசின் இந்த செயல்பாட்டைக் கண்டித்து கோவை மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பாக தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய மாவட்ட தலைவர் அபுதாஹீர், முத்தலாக் சட்டத்தை சரியாக விளங்காமல் சிலர் முத்தலாக் சொன்னால் திருமண பந்தம் நீங்கி விடும் என்றும் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இது இஸ்லாத்திற்கு எதிரானது ஆகும். முத்தலாக் மசோதா மூலம் முஸ்லிம்களை சீண்டும் மத்திய அரசு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.

மேலும் படிக்க