• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை – எச்.ராஜா

September 25, 2018 தண்டோரா குழு

என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.அப்போது,பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு நீதிமன்றம் குறித்தும் காவல்துறை குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

இதனிடையே,அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இதையடுத்து,கடந்த 17-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது.மேலும்,4 வாரத்திற்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று நீதிபதி தகில் ரமானி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது எச்.ராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கரிஞர்,எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சி.டி.செல்வம் அமர்விற்கு அதிகாரம் கிடையாது.இது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே நேரில் ஆஜராக உத்தரவிட முடியும் என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து,இதற்கு உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் ஆய்வு செய்யப்படும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு பதில் அளித்துள்ளது.

மேலும் படிக்க