• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசியக் கோப்பை: இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

September 18, 2018 தண்டோரா குழு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறக்கிய முகமது ஷேசாத் மற்றும் ஜனத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அதை தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி,ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.இதனால் இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இலங்கை அணியில் அதிகபட்சமாக உபுல் தரங்கா 36 ரன்களும்,திசாரா பெராரா 28 ரன்களையும் எடுத்திருந்தனர்.இதைத்தொடர்ந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபரா வெற்றி பெற்றது.இந்த தோல்வி மூலம் ஆசிய கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியது.

மேலும் படிக்க