• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு !

September 14, 2018

இஸ்ரோ மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது,1994ஆம் ஆண்டில், வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை உளவுபார்த்து,மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் 1994ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், சசிக்குமார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

இதற்கிடையில், இந்த வழக்கு கேரள போலீசாரிடம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு, நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டு, வழக்கு 1996ஆம் ஆண்டில் மூடப்பட்டது. உச்சநீதிமன்றமும் நம்பி நாராயணனை குற்றச்சாட்டுகளில் இருந்து 1998ஆம் ஆண்டில் விடுவித்தது. மேலும், நம்பி நாராயணனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,நம்பி நாராயணனை துன்புறுத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள முன்னாள் ஏடிஜிபி சிபி மேத்யூ, ஜோஷ்வா உள்ளிட்ட 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நம்பி நாராயணன் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க