• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு வங்கத்தில் பெட்ரோல்,டீசல் விலை ரூ.1 குறைப்பு!- முதல்வர் மம்தா பானர்ஜி

September 11, 2018 தண்டோரா குழு

மேற்கு வங்கத்தில் பெட்ரோல்,டீசல் விலையில் தலா ரூ.1 குறைக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.வரலாறு காண அளவில் உயர்ந்துள்ள இந்த பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பொது மக்கள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,இந்த விலை உயர்வுக்கு எதிராக,எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில்,ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள் பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைத்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.இதனையடுத்து, தற்போது மேற்கு வங்காள மாநில அரசும் விலை குறைப்பை அறிவித்துள்ளது.அம்மாநிலத்தில் பெட்ரோல்,டீசல் மீதான விலையில் ரூ.1 குறைக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க