September 10, 2018
தண்டோரா குழு
பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெறும் பொது வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இதற்கு தமிழகத்தில் திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதன் ஒரு பகுதியாக அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி கோவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.70 சதவீத பேருந்துகள் ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்படுகிறது.
மேலும்,முக்கிய வணிக இடமான பெரிய கடைவீதி,ஒப்பனக்காரவீதி,குமரன் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.கேரள செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான வாளையாறு வரை மட்டும் இயக்கப்படுகிறது.காந்திபுரம்,உக்கடம்,சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.