• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு

September 7, 2018 தண்டோரா குழு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது.இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் கூறியது.இதற்கடையில்,முதல்வர் பழனிசாமி அமைச்சரவையைக் கூட்டி ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரின் விடுதலையில் உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாகவும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க