• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

September 7, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான சிசிடிவி காட்சிகளை 7 நாட்களில் ஒப்படைக்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி காலமானார்.இதற்கிடையில்,அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கபட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையம் இதுவரை 85க்கு மேற்பட்டோரிடம் விசாரணையும்,45க்கு மேற்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தியுள்ளது.

அதேபோல்,ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.இதனால்,ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி அப்போலோ மருத்துவமனை இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.இதனையடுத்து இன்று அப்போலோ மருத்துவமனை தலைமை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார்.அப்போது,ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடுதான் என அறிக்கை வெளியிட காரணம் என்ன? என அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும்,சிசிடிவியை நிறுத்த சொன்னது யார்? என்றும் பல உறுப்புகளில் பிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா,அவர் நினைக்கையில் வீடு திரும்புவார் என கூறியது ஏன் என்றும்,வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என வெளியிட்ட அறிக்கைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும் எனவும் அப்போலோ மருத்துவமனைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து,ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறந்த நாள் வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க