September 7, 2018
தண்டோரா குழு
திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்,கடந்த 4-ம் தேதி தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில்,பெரியார்,அண்ணா,கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களுடன்,உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு,ஷாமுராய் என்பவர் ‘மிஸ்டர் உதயநிதி,ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில,உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி,‘தவறு… மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார்.