September 6, 2018
தண்டோரா குழு
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என்ற பல ஆண்டுகளாக பெரிதும் எதிப்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும்,இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் ஓரினச்சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்தும்உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டது.
இதைத்தொடர்ந்து மும்பை,டெல்லி,சென்னை,பெங்களூரு உள்பட நாடு முழுவதும் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைபோல் இந்த தீர்ப்பை வரவேற்று இந்தியா முழுவதும் உள்ள திரைப்பலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“சுயத்தை வெளிப்படுத்த முடியாத சூழலும் மரணமே!மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் மிகவும் அவசியமான வார்த்தைகள் வந்துள்ளன.நம்பிக்கையை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.இந்த தீர்ப்பு ஒரு வரலாறு” எனப் பதிவிட்டுள்ளார்.