• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“சுயத்தை வெளிப்படுத்த முடியாத சூழலும் மரணமே! உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆர்.ஜே. பாலாஜி டுவீட்

September 6, 2018 தண்டோரா குழு

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என்ற பல ஆண்டுகளாக பெரிதும் எதிப்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும்,இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் ஓரினச்சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்தும்உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டது.

இதைத்தொடர்ந்து மும்பை,டெல்லி,சென்னை,பெங்களூரு உள்பட நாடு முழுவதும் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைபோல் இந்த தீர்ப்பை வரவேற்று இந்தியா முழுவதும் உள்ள திரைப்பலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தீர்ப்பு குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,

“சுயத்தை வெளிப்படுத்த முடியாத சூழலும் மரணமே!மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் மிகவும் அவசியமான வார்த்தைகள் வந்துள்ளன.நம்பிக்கையை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.இந்த தீர்ப்பு ஒரு வரலாறு” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க