September 4, 2018
தண்டோரா குழு
விளம்பரத்திற்காக கோஷமிடுவதை அனுமதித்தால்,விமான நிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
“தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக-வை எதிர்த்து முழக்கமிட்ட மாணவி சோபியாவின் செயல் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக ரீதியில் போராடலாம், அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் இடம்,பொருள்,ஏவல் என்று ஒன்று உள்ளது.கருத்து சுதந்திரம் உள்ளது என்பதால்,விமானத்திற்குள் சோபியா கோஷமிடலாமா? விளம்பரத்திற்காக இதுபோன்று பலர் செய்து வருகின்றனர்.மேலும்,விளம்பரத்திற்காக கோஷமிடுவதை அனுமதித்தால்,விமான நிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்”.