• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அஞ்சலக வங்கி சேவை திட்டம் துவக்கம்

September 1, 2018 தண்டோரா குழு

அஞ்சல் துறையின் பேமண்ட்ஸ் பேங்க் வங்கி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

டெல்லியில் உள்ள டல்காட்டோரா விளையாட்டு அரங்கத்தில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.அதேநேரத்தில் நாடு முழுவதும் உள்ள 650 அஞ்சலகங்களில் மத்திய மந்திரிகள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.இந்திய அஞ்சலக வங்கி தொடக்க விழாவில் சுமார் 50,000 கணக்குகள் தொடங்கப்பட்டன

ஐபிபிபி (I.P.P.B) வங்கிகளில் சேமிப்பு,தற்போதைய கணக்குகள்,பண பரிமாற்றம்,நேரடி சலுகைகள் பரிமாற்றம்,கட்டணம் செலுத்துதல் போன்ற பல சேவைகள் இதில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலக வங்கி சேவை திட்டத்தை ரிசர்வ் வங்கி நிர்வகிக்க உள்ளது.வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் அஞ்சலகங்களில் இந்த “இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க்” திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க