• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

August 30, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர்க்கான ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 11-வது நாளான நேற்று மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் கலந்துக் கொண்டு தங்கம் பதக்கம் வென்றார்.

இதில் 100மீ ஓட்டத்தில் 981 புள்ளிகள் (5வது இடம்),உயரம் தாண்டுதலில் 1003 புள்ளிகள் (முதலிடம்), குண்டு எறிதலில் 707 புள்ளிகள் (2வது இடம்),200மீ ஓட்டத்தில் 790 புள்ளிகள் (7வது இடம்),நீளம் தாண்டுதலில் 865 புள்ளிகள்(2வது இடம்),ஈட்டி எறிதல் 872 புள்ளிகள்(முதலிடம்),800 மீ ஓட்டத்தில் 808 புள்ளிகள் (4வது இடம்) என மொத்தமாக 6026 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கதை வென்றார்.

இந்நிலையில் தங்க பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில்,”இந்த வெற்றி ஸ்வப்னா பர்மானின் திறமையின் எடுத்துக்காட்டு தான். உன்னை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது”.என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க