• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்

August 28, 2018 தண்டோரா குழு

தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலினையும்,பொருளாளராக துரைமுருகனையும் கட்சியின் பொதுச்செயலாளா் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்தாா்.திமுக தலைவரான பின்னர் முதன்முறையாக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“கருணாநிதியின் மகன் என்பதைவிட அவரது தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு கொண்டவனாக இருக்கிறேன்.நான் கருணாநிதி இல்லை,அவர் போல் எனக்கு பேசத் தெரியாது,பேசவும் முடியாது.திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன்.எனது பெரியப்பா பேராசிரியர் அன்பழகன்,பெரியப்பாவிடம் நல்ல பெயர் பெறுவது 200 மடங்கு சமம்.திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை.தமிழகத்தில் சுயமரியாதை கொள்கைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.முதுகெலும்பில்லாத மாநில அரசை தூக்கி எறிய வா; அழகான எதிர்காலத்தை ஒன்றாக அமைப்போம்.மேலும்,இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்” இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க