• Download mobile app
03 Aug 2026, MondayEdition - 3827
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற நபரை விரட்டிபிடித்த பொதுமக்கள்

August 27, 2018 தண்டோரா குழு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவையை அடுத்த,GN மில்ஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவையை அடுத்த GN மில்ஸ் பகுதியில் உள்ள சுப்ரமணியபாளையம் பகுதியில்,சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்று உள்ளார்.அப்போது அதே பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்,அந்த பெண்ணின் நகையை பறிக்க முயன்று உள்ளார். உடனடியாக,அப்பகுதியில் இருந்த பொதுமக்கள்,அனைவரும் அவரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஒன்று கூடி அவரை அடித்துள்ளனர்.அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.பின்னர் அந்த நபரின் இரு கைகளையும் கட்டி வைத்து,காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.விசாரணையில் அவர் பெருமாநல்லூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து காவல் துறையினர்,அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க