• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டாலினின் கவலைக்கு மேடையில் மருந்து கொடுத்த நடிகர் பார்த்திபன்

August 25, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் ” மறக்க முடியுமா கலைஞரை” என்னும் தலைப்பில் திரைப்படத்துறையினர் பங்குபெறும் அஞ்சலி நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துணைபொதுசெயலாளர் துரைமுருகன், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சத்யராஜ், சிவக்குமார்,ராதாரவி, ராஜேஷ், பிரபு, பிரகாஷ் ராஜ்,மோகன் பாபு இயக்குநர் பாரதி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசுகையில்,

தமிழ் எனக்கு உயிர் போன்றது. கலைஞர் இறந்த பிறகு தமிழுக்கே உயிர் போனது. உலகின் எந்த தலைவருக்கு கிடைத்த தொண்டர்கள் கலைஞருக்கு கிடைத்துள்ளனர்.கலைஞர் மறைந்த பிறகும் அவரின் உடன் பிறப்புகளான உங்களை தான் நான் கலைஞராக பார்க்கிறேன் என்றார்.

அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த நடிகர் பார்த்திபன் ஸ்டாலின் மிகவும் கவலையாக உள்ளார்.அவருக்கு நான் ஒரு டானிக் வைத்திருக்கேன் என்று ஸ்டாலினை மேடைக்கு அழைத்து ஸ்டாலினுக்கு மஞ்சள் துண்டு அணிவித்தார். அப்போது தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.

மேலும் படிக்க