• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவுக்கு உதவ தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

August 24, 2018 தண்டோரா குழு

கேரளாவுக்கு உதவ தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்தவாரம் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர். பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர். இதனால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்குபல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவுக்கு உதவ தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள இந்தியாவின் கேரள மாநிலத்துக்காக பாகிஸ்தான் மக்களின் சார்பாக பிரார்த்திப்பதாகவும் மனிதாபிமான அடிப்படையில் கேரளாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவரது இந்தக் கருத்துக்கு பாகிஸ்தானில் இருந்தும், வளைகுடா நாடுகளில் இருந்தும் சமூக வலைதளங்களில் ஆதரவும், பாராட்டும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க