August 24, 2018
தண்டோரா குழு
தமிழகத்தின் கடற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விழுப்புரம்,கடலூர்,புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.மேலும்,சென்னை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.