• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலிருந்து சென்னை வரை 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரும் இயற்கை பேரிடர் நிகழும்

August 23, 2018 தண்டோரா குழு

கோவையிலிருந்து சென்னை வரை 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரும் இயற்கை பேரிடர் நிகழப்போவதாக சித்தர் சாமி ராஜேந்திரன் கூறியுள்ளார்.

கோவையில் சித்தர் சாமி ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

நான் ஏற்கனவே சுனாமி, உத்திரகாண்ட், சென்னை வெள்ளம், கும்பகோணம் தீ விபத்து, மற்றும் கேரளா பேரிடர் உட்பட 12 அழிவுகளை முன்கூட்டியே சொல்லி இதுவரை நடந்துள்ளதாகவும் பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே அரசு மற்றும் பொதுமக்களுக்கு தெரிவித்தும் இதுவரை அலட்சியமாக இருந்ததால் மக்கள் அதிகளவில் இறந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவையை மையமாக வைத்து வர இருக்கின்ற பேரிடரால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இதனை தடுக்க தன்னால் மட்டுமே முடியும் எனவும், இது குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தன்னை வந்து சந்தித்தால் பேரழிவை தடுத்து நிறுத்த முடியும் என்றார்.

மேலும் படிக்க