• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தூக்குதண்டனை

August 21, 2018 தண்டோரா குழு

மத்திய பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சார் மாவட்டத்தில் படித்து வந்த 7 வயது சிறுமி,கடந்த ஜூன் 26-ம் நாள் கடத்தப்பட்டார்.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையினை மேற்கொண்ட காவல்துறையினர் அன்றையே தினமே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்,அச்சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயற்சித்துள்ளது தெரியவந்தது.இதனையடுத்து,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமி தீவிர சிகிச்சைக்கு பின் உடல் நலம் பெற்றார்.

இதையடுத்து,இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் CCTV காட்சி உதவியுடன் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாலிகள் இர்ஃபான் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை கடந்த இரண்டு மாதங்களாக மண்ட்சார் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில்,இன்று குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க