August 21, 2018
தண்டோரா குழு
கேரள வெள்ள நிவாரணத்திற்கு திமுக எம்எல்ஏக்கள்,எம்.பி-க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 361 பேர் உயிரிழந்துள்ளனர்.கேரளாவில் பல்வேறு மாநிலங்கள் வெள்ளக்காடாகின.இதனால் வீடுகளை இழந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.
கேரள மாநிலத்திற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து அரசியல் கட்சிகள் முதல் நடிகர்கள்,பொதுமக்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,திமுக சார்பில் கேரள நிவராண நிதியாக ஒரு கோடி வழங்கப்பட்ட நிலையில்,தற்போது கேரள வெள்ள நிவாரணத்திற்கு திமுக எம்எல்ஏக்கள்,எம்.பி-க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.