• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காருடன் 18 மணி நேரம் நிலச்சரிவில் சிக்கி தவித்தேன் – நடிகர் ஜெயராம்

August 21, 2018 தண்டோரா குழு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 361 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.இதனால் வீடுகளை இழந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.இதற்கிடையில்,கேரள மழை வெள்ளத்தில் நடிகர்-நடிகைகளும் சிக்கினார்கள்.திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருதிவிராஜ் வீட்டில் வெள்ளம் புகுந்து பிருதிவிராஜ் தாயார் மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கினார்.

அதைப்போல் நடிகை அனன்யா,காமெடி நடிகர் சலீம்குமார் போன்றோரும் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்புபடையினர் மீட்டனர்.இதைப்போல் நடிகர் ஜெயராம் தனது மனைவி,மகளுடன் காரில் சென்றபோது நிலச்சரிவில் சிக்கி தவித்தார் அவர்களை போலீசார் மீட்டனர்.

இந்நிலையில்,நிலச்சரிவில் சிக்கித் தவித்த அனுபவம் குறித்து ஜெயராம் பகிர்ந்துள்ளார். அதில்,

“நானும் எனது மனைவி,மகளும் நிலச்சரிவில் சிக்கியது மிகவும் கொடூரமான அனுபவம்.18 மணிநேரம் அவதிப்பட்டோம்.போலீசார் வந்து எங்களை பத்திரமாக மீட்டனர்.மூன்று நாட்கள் போலீஸ் குடியிருப்பில் தான் தங்கி இருந்தோம்.இதற்காக காவல் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போது முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக உணவுப்பொருட்களுடன் செல்கிறேன்.குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள்,மருந்துகள்,நாப்கின் அதிகம் தேவைப்படுகிறது.உதவி செய்பவர்கள் அவற்றை கொடுங்கள்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க