• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆட்டோவில் உண்டியல் பொறுத்தி கேரள மக்களுக்கு நிதி திரட்டப்படுகிறது

August 20, 2018 தண்டோரா குழு

வரலாறு காணாத மழையினால் நிலைக்குலைந்துள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில் கோவையில் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களின் ஆட்டோவில் உண்டியல் பொருத்தி நிதி திரட்டி வருகின்றனர்.

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம்,மண் சரிவு உள்ளிட்டவைகளால் கேரள மாநில மக்கள் தங்கள் உடமை,வீடு ஆகியவற்றை இழந்து தவித்து வருகின்றனர்.அவர்களின் மறுவாழ்வுக்காக,துயரத்தில் பங்கெடுக்கும் வகையில் கோவை தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை நகரத்தில் இயக்கப்படும் சுமார் 150 ஆட்டோக்களில் கேரள வெள்ள நிவாரணம் என்ற பெயரில் உண்டியல் பொருத்தி ஆட்டோவில் வரும் வாடிக்கையாளர்களிடம் நிதி உதவி திரட்டப்படுகிறது.

மேலும்,ஆட்டோ ஓட்டுனர்களும் தங்களின் வருவாயில் ஒரு பகுதியை நிவாரண நிதியாக அளிக்கவுள்ளனர்.எனவே,பொதுமக்கள் தங்களின் ஆதரவை தெரிவிக்கும் படியும் ஆட்டோ ஓட்டுனர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க