• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு!

August 20, 2018 தண்டோரா குழு

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை,வெள்ள சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. 100ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால்,கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தது.

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மக்களை மீட்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இதையடுத்து,கேரளாவில்,தொடர்ந்து,10 நாட்களாக பெய்த கன மழையால்,மாநிலத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிந்து வருகின்றது.இதனால்,மாநிலம் முழுவதும்,குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது.இதனால் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு கோரியிருந்தது.

இந்நிலையில்,கேரளா மழை வெள்ள பாதிப்பை அதி தீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும்,வெள்ளத்தில் சிக்கி 247 பேர் பலி,17,343 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க